News August 31, 2025
இந்த வாரத்தில் பள்ளிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை

பள்ளிகளுக்கு இந்த வாரத்தில் 3 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. செப்.5-ம் தேதி(வெள்ளிக்கிழமை) மிலாடி நபியை முன்னிட்டு அரசு விடுமுறையாகும். அதனைத் தொடர்ந்து செப்.6(சனிக்கிழமை), செப்.7(ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறையாகும். வரும் 15-ம் தேதி முதல் காலாண்டு தேர்வு தொடங்குவதால் இந்த தொடர் விடுமுறை, மாணவர்கள் தேர்வுக்கு தயாராக மிகவும் பயனுள்ள வகையில் அமையும். SHARE IT.
Similar News
News September 4, 2025
திமுக அரசில் ஜல்லிக்கட்டு டோக்கன்களிலும் ஊழல்: EPS

2026-ல் ADMK ஆட்சி அமைந்தவுடன், பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் வழங்கப்படும் என சேந்தமங்கலம் தேர்தல் பரப்புரையில் EPS தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டி டோக்கன்களிலும் ஊழல் செய்த திமுக அரசு அதிமுக அரசு கொண்டுவந்த திட்டங்களுக்கு புதிய வடிவில் பெயர் சூட்டி வருவதாக சாடினார். மேலும், டாஸ்மாக்கில் ₹1,000 கோடி ஊழலை ED கண்டுபிடித்துள்ளதாகவும் விரைவில் பலர் கைதாக உள்ளனர் என ஆருடம் தெரிவித்தார்.
News September 4, 2025
அனைத்து ரேஷன் கார்டுக்கும் ₹5,000.. வெளியான புது தகவல்

2026 பொங்கல் பண்டிகை சிறப்புத் தொகுப்புடன், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹5,000 ரொக்கம் வழங்க TN அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை தீபாவளி பண்டிகையின்போது CM ஸ்டாலின் வெளியிட உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் மாநிலம் முழுவதும் சுமார் 2.20 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைவார்கள். இது குறித்து உங்கள் கருத்து என்ன?
News September 4, 2025
சச்சினை விட சிறந்த பேட்ஸ்மேனா ஏபி டி?

21-ம் நூற்றாண்டின் சிறந்த ODI பேட்ஸ்மேன்கள் பட்டியலை ஏபி டிவில்லியர்ஸ் வெளியிட்டுள்ளார். அதில், விராட் கோலிக்கு நம்பர் 1 இடத்தை வழங்கிய அவர், சச்சினுக்கு 4-வது இடத்தை கொடுத்துள்ளார். ஆனால், அடுத்த அவர் செய்தது தான் சச்சின் ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்றுள்ளது. சச்சினை விட தானே சிறந்த பேட்ஸ்மேன் என தனக்கு 2-ம் இடத்தை வழங்கியுள்ளார். மேலும், இந்த பட்டியலில் ரோஹித் 6, தோனி 7-ம் இடத்திலும் உள்ளனர்.