News August 31, 2025
BREAKING: வெளுத்து வாங்கும் கனமழை

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று(ஆக.31) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று காலையில் 17 மாவட்டங்களுக்கு மழைக்கான அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் நள்ளிரவில் மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டித் தீர்த்ததால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
Similar News
News September 4, 2025
டாஸ்மாக் கடைகள் நாளை இயங்காது

நபிகள் நாயகம் பிறந்த தினமான நாளை(செப்.5) மிலாடி நபி கொண்டாடப்படுகிறது. இதனால், மாநிலம் முழுவதும் உள்ள அரசு டாஸ்மாக்(TASMAC) கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்களில் நாளை மது விற்பனை செய்யக்கூடாது என அரசு அறிவித்துள்ளது. விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்யும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பார் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News September 4, 2025
உயர்கல்வியில் பின்தங்கும் தமிழகம்

நாட்டிலேயே உயர்கல்வி பயிலும் மாணவர் எண்ணிக்கை அதிகமாக(50%) உள்ளது தமிழகத்தில் தான் என்று பெருமையாக சொல்கிறோம். ஆனால், நாட்டின் டாப் கல்வி நிலையங்கள் தரவரிசையில், முதல் 10 இடங்களில் ஒரே ஒரு நிறுவனம் தான் (மத்திய அரசு நடத்தும் சென்னை ஐஐடி) இடம்பெறுகிறது. தனியார் கல்வி நிறுவனங்களான அம்ரிதா(22), சவீதா (23) ஆகிய இடங்களில் இருக்க, அண்ணா பல்கலை (29-வது), சென்னை பல்கலை(68) பின்தங்கியுள்ளன. உங்க கருத்து?
News September 4, 2025
BIG BREAKING: அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்

அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக சென்னை சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. வரும் 15-ம் தேதிக்குள் பிடிவாரண்ட் ஆணையை செயல்படுத்த வேண்டும் என TN காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. 2007 – 2009 காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ₹1.40 கோடி சொத்து சேர்த்ததாக 2011-ல் DVAC தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகததால் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


