News August 31, 2025

BREAKING: புதிய டிஜிபியாக வெங்கடராமன் நியமனம்

image

தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக(பொறுப்பு) வெங்கடராமன் நியமிக்கப்பட்டுள்ளார். டிஜிபி சங்கர் ஜிவால் இன்று பணி ஓய்வு பெறும் நிலையில், நிர்வாக பிரிவு டிஜிபியாக உள்ள வெங்கடராமனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நாகையை சேர்ந்த இவர், 1994-ல் IPS ஆக தேர்வானவர். பல மாவட்டங்களில் SP ஆக பணியாற்றியதோடு, முக்கியத்துவம் வாய்ந்த CBCID, நிர்​வாக பிரிவி​களில் அரசின்​ பா​ராட்​டை பெற்​றவர்.

Similar News

News September 4, 2025

தோனி IPL-ல் இருந்து ஓய்வா? வைரல் செய்தி!

image

கடந்த சில வருடங்களாகவே, தோனி எப்போது IPL தொடரில் இருந்து ஓய்வு பெறுவார் என்பதே பெரும் விவாத பொருளாக உள்ளது. 2025 சீசனில் பாதியில் இருந்து அணிக்கு கேப்டனான அவர், 2026 சீசனுக்கு முன்பாக ஓய்வு பெற்று விடுவார் எனப்பட்டது. ஆனால், 2026 சீசனிலும் கேப்டனாக விளையாடுவார் என்ற செய்தி சோஷியல் மீடியாவை ஆக்ரமித்துள்ளது. இது உறுதிப்படுத்தப்படாத தகவல் என்ற போதிலும், ரசிகர்கள் இப்போதே குதுகாலத்தில் ஆழ்ந்துள்ளனர்.

News September 4, 2025

சீனாவை தொடர்ந்து சிங்கப்பூருடன் அதிக நெருக்கம்!

image

டெல்லியில் சிங்கப்பூர் PM லாரன்ஸ் வாங் உடன் PM மோடி இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பேசிய PM மோடி, பஹல்காம் தாக்குதல் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்ததற்கு சிங்கப்பூர் அரசுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், வர்த்தகம், தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு, விண்வெளி ஆராய்ச்சிகளில் இருநாடுகளும் இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளதாகவும் கூறினார்.

News September 4, 2025

+2 பொதுத்தேர்வில் மாற்றம்.. தமிழக அரசு அறிவிப்பு

image

10 KM தூரத்திற்கு மேல் பயணம் செய்து பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே சென்டர் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. Exam சென்டருக்கு விண்ணப்பிக்கும் பள்ளிகள் அரசு அங்கீகாரம் பெற்றிருக்கவேண்டும் எனவும், வரும் 15-ம் தேதிக்குள் கருத்துருவை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தேர்வுத்துறை இயக்குநர் சசிகலா ஆணையிட்டுள்ளார். அரசின் இந்த முடிவால் பல லட்சம் பள்ளி மாணவர்கள் பலனடைவர்.

error: Content is protected !!