News August 31, 2025
தினமும் ₹50 சேமித்தால், ₹1 லட்சம் தரும் திட்டம்

பணம் சேமிப்பதற்கு பல வழிகள் இருந்தாலும், அஞ்சல் அலுவலகத்தின் தொடர் வைப்புத் திட்டம் சிறந்த வழியாக இருக்கிறது. பெரிய தொகையை சேமிக்க முடியாதவர்கள் இத்திட்டத்தில் தினமும் வெறும் ₹50 சேமித்து, 6.7% வட்டியோடு, 5 ஆண்டுகளில் ₹1 லட்சம் வரை பெறலாம். உங்களால் எவ்வளவு சேமிக்க முடிகிறதோ அதற்கு ஏற்றார் போல் தொகை கிடைக்கும். Post Office-க்கு சென்று உங்களுக்காக கணக்கை தொடங்குங்கள். SHARE.
Similar News
News September 4, 2025
அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையான மீலாது நபியை முன்னிட்டு, நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை (இன்று இரவு 10 மணி முதல் 6-ம் தேதி மதியம் 12 மணி வரை) மூட வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதை மீறி, மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
News September 4, 2025
நாளை காத்திருக்கும் கோலிவுட் ட்ரீட்!

✦மதராஸி: SK-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவானதால் எதிர்பார்ப்பின் உச்சத்தில் உள்ளது.
✦Ghaati: ‘வானம்’ கிரிஷ் இயக்கத்தில், அனுஷ்கா நீண்ட இடைவெளிக்குப் பிறகான, கம்பேக் படம் கவனம் ஈர்த்துள்ளது.
இந்த படங்களுடன் வெற்றிமாறன் தயாரித்த ‘Bad Girl’, KPY பாலா ஹீரோவாக அறிமுகமாகும் ‘காந்தி கண்ணாடி’, ‘Conjuring Last Rites’ ஆகிய படங்களும் ரிலீசாகின்றன. நீங்க முதலில் எந்த படம் பாக்க போறீங்க?
News September 4, 2025
ED விசாரணை வளையத்தில் ஷிகர் தவான்

சூதாட்ட செயலி விளம்பரம் தொடர்பாக, கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு ED சம்மன் அனுப்பியுள்ளது. ஏதேனும் அவர் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளாரா என்ற சந்தேகத்தின்பேரில் ED விசாரிக்க உள்ளது. சூதாட்ட செயலி விளம்பரம் தொடர்பாக ஏற்கனவே சுரேஷ் ரெய்னா மற்றும் திரை நட்சத்திரங்களான ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி தங்கள் விளக்கத்தை கொடுத்துள்ளனர்.