News April 9, 2024

மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார் மோடி

image

பிரதமர் மோடி மக்களை தவறாக வழிநடத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார். 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக மீண்டும் தேர்தலை சந்திக்கிறது. 10 ஆண்டுகளில் மக்களுக்கு செய்த நலத்திட்டங்களை கூறுவதை விடுத்து, எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து பிரதமர் மோடி பேசி வருகிறார். இதன் மூலம் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக அவர் தெரிவித்தார்.

Similar News

News March 13, 2026

CINEMA 360: வேள்பாரியில் தனுஷ்!

image

*ஷங்கர் இயக்கவுள்ள ‘வேள்பாரி’ படத்தில் தனுஷ் & விக்கி கவுசல் நடிப்பார்கள் என கூறப்படுகிறது *ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யாவின் ‘கருப்பு’ மே மாதத்திற்கு தள்ளிப்போகிறதாம் *‘கர’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது *‘என்ஜாயி எஞ்சாமி’ பாடலுக்காக சம்பளம் வழங்கவில்லை என அறிவு பதிவிட, ஆதாரத்துடன் விவாதிக்க தயாரா என சந்தோஷ் நாராயணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

News March 13, 2026

தமிழகத்தில் தினமும் ஒரு நிர்பயா: இன்பதுரை MP

image

மணிப்பூரைப் போல தமிழகத்திற்கும் மத்திய அரசு நாடாளுமன்ற குழுவை அனுப்பி பெண்கள் பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என இன்பதுரை MP வலியுறுத்தியுள்ளார். ராஜ்ய சபாவில் பேசிய அவர், கடந்த 10 நாள்களில் மட்டும் 2½ வயது குழந்தை, 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வேதனை தெரிவித்தார். மேலும், தினம் தினம் ஒரு நிர்பயா வழக்கை தமிழகம் சந்தித்து கொண்டிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

News March 13, 2026

வங்கி கணக்கில் ₹2,000 வந்தது.. சற்றுமுன் டெபாசிட்

image

விவசாயிகளின் வங்கிக் கணக்கில், PM KISAN திட்டத்தின் 22-வது தவணைத் தொகையை (₹2,000) மத்திய அரசு இன்று டெபாசிட் செய்துள்ளது. அசாமில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற PM மோடி, இதற்கான நிதியை விடுவித்துள்ளார். இதன்மூலம், நாடு முழுவதிலும் 9.32 கோடி நலிவடைந்த விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். KYC அப்டேட், நில ஆவணம் சமர்ப்பிப்பு உள்ளிட்டவற்றை நிறைவு செய்யாத பயனாளிகளுக்கு இந்த தவணை நிராகரிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!