News August 31, 2025
மாநாட்டை ஒத்திவைத்த ஓபிஎஸ்.. பின்னணி என்ன?

மதுரையில் வரும் 4-ம் தேதி நடைபெறுவதாக இருந்த மாநில மாநாட்டை ஒத்திவைப்பதாக OPS, திடீரென அறிவித்துள்ளார். NDA கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த பின்னர், CM ஸ்டாலினுடன் அடுத்தடுத்து சந்திப்பு, அதிமுக மீட்பு என அடுத்தடுத்து பேசுபொருளானார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலத்தில், அதிமுகவின் வெற்றிக்காக பாடுபடுவேன் என OPS கூறியிருந்த நிலையில், தற்போது மாநாட்டையும் ஒத்திவைத்துள்ளார்.
Similar News
News September 1, 2025
மது பாட்டிலுக்கு ₹10 பிரச்னை.. டாஸ்மாக் புதிய உத்தரவு

காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்திற்கு <<17580578>>டாஸ்மாக் ஊழியர்கள்<<>> எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். கூடுதல் பணிச்சுமை ஏற்படும் என்றும், காலி பாட்டில்களை வைக்க கடையில் இடவசதி இல்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்நிலையில், திட்டத்தை முறையாக செயல்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் குழு அமைத்துள்ளது. நிலவரத்தை ஆராய்ந்து 5 நாள்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
News September 1, 2025
Beauty: இதை செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் போயிடும்

இளம் வயதிலேயே முகத்தில் சுருக்கங்கள் விழ மன அழுத்தம், தூக்கமின்மை என பல காரணங்கள் இருக்கிறது. இதை சரி செய்யவே முடியாதா என நீங்கள் வருந்தவேண்டாம். ▶இதற்கு, இரவு நேரத்தில் கற்றாழை ஜெல்லை கொண்டு 5 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். ▶வாழைப்பழம் / பப்பாளி சாறை முகத்தில் தடவுங்கள் ▶தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவுவது சிறந்தது ▶மன அழுத்தத்தை குறைப்பதும் அவசியம். SHARE.
News September 1, 2025
₹ 3,201 கோடி முதலீடுகளை ஈர்த்த முதல்வர்

ஜெர்மனி சென்றுள்ள CM ஸ்டாலின் தமிழகத்திற்கு ₹ 3,201 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளார். ரயில்வே கதவுகள் மற்றும் பிரேக்கிங் சிஸ்டம் தயாரிக்கும் நிறுவனமான KNORR – BREMSE ₹ 2,000 கோடி முதலீடு செய்கிறது. NORDEX குரூப் ₹ 1,000 கோடியும், மின் சக்தி சார்ந்த நிறுவனமான EBM – PAPST ₹ 201 கோடியும் முதலீடு செய்கின்றன. இதன் மூலம் தமிழகத்தில் 6,250 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது.