News April 9, 2024

பேடிஎம் பேமெண்ட் பேங்க் சிஇஓ ராஜினாமா

image

பேடிஎம் பேமெண்ட் பேங்கின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான சுரிந்தர் சாவ்லா பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். பேடிஎம் பேமெண்ட் பேங்க் மீது ஜனவரி 31ஆம் தேதி ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. டெபாசிட் மற்றும் கடன் பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில் சுரிந்தர் சாவ்லா ராஜினாமா செய்துள்ளார்.

Similar News

News March 17, 2026

தவெக வேண்டாம்.. பாஜக முடிவில் மாற்றமா?

image

அதிமுக கூட்டணியில் தவெகவை இணைக்க மறைமுக பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், தவெகவை அதிமுக கூட்டணியில் இணைக்கும் முடிவை பாஜக தலைமை கைவிட்டுவிட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதனால் 2026 தேர்தலில் தவெக தனித்தே களம் காணும் என்பதும், 4 முனைப் போட்டிதான் என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?

News March 17, 2026

BREAKING: வருத்தம் தெரிவித்தார் CV சண்முகம்

image

விழுப்புரம் நிகழ்ச்சியில் <<19406314>>நடிகை நயன்தாரா<<>> குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு CV சண்முகம் வருத்தம் தெரிவித்துள்ளார். அவரது பேச்சுக்கு மகளிர் ஆணையம் உள்பட பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இதனையடுத்து, வருத்தம் தெரிவித்த CV சண்முகம், நயன்தாராவின் பெயர் தவறாக உச்சரிக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார். உள்நோக்கத்தோடு பேசவில்லை; வாய் தவறி பேசி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News March 17, 2026

CVS மீது ECI நடவடிக்கை எடுக்கணும்: பாலபாரதி

image

<<19406314>>நடிகை நயன்தாரா<<>> குறித்து C.V.சண்முகம் சர்ச்சையாக பேசியது அரசியல் ரீதியாக விவாதப்பொருளாக மாறியுள்ளது. தமிழ்நாட்டு பெண்களிடம் சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று Ex MLA பாலபாரதி, வலியுறுத்தியுள்ளார். மேலும், பெண்கள் குறித்து சி.வி.சண்முகம் இவ்வாறு பேசுவது, இது முதல்முறை அல்ல என்றும் அவர் தேர்தலில் போட்டியிடாத வகையில் ECI நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!