News August 31, 2025
புதுக்கோட்டைக்கு மாநில அந்தஸ்து!

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது புதுக்கோட்டை சமஸ்தானம், தனி மாநிலமாக விளங்கிய எல்லைக் கல் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். தனி சமஸ்தானமாக விளங்கிய புதுக்கோட்டை பல்வேறு காலகட்டங்களில் ஆங்கிலேயருக்கு இணக்கமாக இருந்து தன் அரசைப் பாதுகாத்து வந்தது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1948 மார்ச் மாதம் 3 ஆம் நாள் புதுக்கோட்டை சமஸ்தானம் மன்னர் ராஜகோபாலத் தொண்டைமானால் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
Similar News
News September 4, 2025
புதுக்கோட்டை: 10th போதும்.. காவல்துறையில் வேலை

புதுகை மக்களே POLICE ஆக ஆசையா?.. தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள்<
News September 4, 2025
புதுக்கோட்டை: டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்

நாளை (செப்.05) மிலாடி நபி தினத்தையொட்டி, அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை இல்லாத உலர் நாளாக தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு சில்லறை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்தும் முழுவதுமாக நாளை ஒரு நாள் மூடிடவும், அரசின் விதிமுறைகளை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.
News September 4, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

புதுக்கோட்டை மாவட்டம் கணேஷ் நகர் தனியார் மஹால், அரிமளம் கீழப்பனையூர் சமுதாயக்கூடம், அன்னவாசல் கீழக்குறிச்சி சமுதாயக்கூடம், விராலிமலை மேலபச்சக்குடி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் இன்று (செப்.4) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடக்கிறது. இதில், 15 அரசு துறைகள் சார்பில் 46 சேவைகள் வழங்கப்பட உள்ளன. இந்த முகாமில் பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறுமாறு ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.