News August 31, 2025

டூவீலர் மீது கார் மோதி முதியவர் உயிரிழப்பு

image

ஆத்தூர் அருகே பழனியாபுரியை சேர்ந்தவர் செல்லமுத்து, (75). இவர் நேற்று காலை கொத்தம்பாடி பகுதியில் இருந்து பழனியாபுரி நோக்கி சென்று கொண்டிருந்தார். அங்கு பிரிவு சாலையில் திருப்பியபோது, சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனிமுத்து, சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். ஆத்தூர் ஊரக போலிசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News September 4, 2025

சேலம்: குழந்தைத் தொழில் 1098 உடனே புகார்!

image

சேலம் மாவட்ட காவல்துறையினர் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மட்டுமின்றி பொதுமக்கள் சமுதாய முன்னேற்றத்திலும் கவனம் செலுத்தி வருகின்றனர். அதன்படி குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக ஒழித்து குழந்தை கல்வி கற்கும் திறமையை வளர்க்க வேண்டும், என வலியுறுத்தியுள்ளனர். குழந்தை தொழிலாளர் வைத்திருந்தால் 1098 புகார் தெரிவித்தால் உடனே நடவடிக்கை எடுத்து குழந்தையை கல்விப் பயில வைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

News September 4, 2025

சேலம் விவசாயிகள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

image

சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மரவள்ளிக் கிழங்கு அதிகளவில் பயிரிடப்படுகிறது. இருப்பினும் ஜவ்வரிசியின் விலை குறைவதால், இதன் மூலப்பொருளான மரவள்ளிக் கிழங்கின் விலையும் குறைந்து விடுகிறது. இதனால் மரவள்ளிக் கிழங்கிற்கு உரிய விலையின்றி விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் ரேஷன் கடைகளின் மூலம் ஜவ்வரிசியை வழங்க அரசு முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

News September 3, 2025

சேலம்: லக்கேஜ் தொலைஞ்சு போச்சா?

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார்.

error: Content is protected !!