News August 31, 2025

கடலூர் அருகே 2 சிறுவர்கள் பரிதாப பலி

image

வேப்பூர் தாலுகா, கீழ் ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சாஸ்தா மனைவி ஆஷா. இவர் தனது மகள் சிவரஞ்சனி (8), மகன் குணா (6) ஆகியோருடன் நேற்று அசகளத்தூர் ஏரிக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது சிறுவர்கள் இருவரும் தனியாக ஓர் இடத்தில் நின்று மீன் பிடித்து கொண்டிருந்த போது, இருவரும் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் உடலை மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News September 1, 2025

கடலூர்: ஒரு மெசேஜ் போதும், உடனடி தீர்வு !

image

உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், கடலூர் மாவட்ட மக்கள் ‘94458-55768’ என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால், வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் பகிரவும்!

News September 1, 2025

வியக்க வைக்கும் சிதம்பரம் நடராஜர் கோவில்

image

பஞ்சபூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் சிதம்பரம் நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE) அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த துல்லியம் பண்டைய காலத்தில் கணிக்கப்பட்டது ஒரு பொறியியல், புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம். SHARE பண்ணுங்க!

News September 1, 2025

கடலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் (31/08/2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!