News August 31, 2025

40 ஆண்டுகளுக்கு பிறகு இரயில் சேவை

image

திருநள்ளாறு – பேரளம் இடையே 23.5 கி.மீ., தொலைவுக்கு கடந்த 1986ம் ஆண்டு அகலப்பாதையாக மாற்றும் பணிக்காக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், 40 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று (ஆகஸ்ட் 29) முதல் வரும் 8ம் தேதி வரை வேளாங்கண்ணி திருவிழாவிற்காக விழுப்புரம், மயிலாடுதுறை, பேரளம், திருநள்ளாறு, காரைக்கால் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News September 4, 2025

தஞ்சையில் டாஸ்மாக் கடைகள் மூடல்!

image

நாளை (செப்.05) மிலாடி நபி தினத்தையொட்டி, தஞ்சையில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை இல்லாத உலர் நாளாக தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. திருச்சியில் செயல்பட்டு வரும் அரசு சில்லறை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்தும் முழுவதுமாக நாளை ஒரு நாள் மூடிடவும், அரசின் விதிமுறைகளை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது எனவும் தஞ்சை மாவட்ட ஆட்சியரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News September 4, 2025

தஞ்சை மக்களே முற்றிலும் இலவசம், Don’t Miss It

image

தஞ்சை மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க இங்கே <>கிளிக் <<>>செய்யவும் அல்லது உங்கள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பதிவு செய்து பயன் பெறலாம்.SHARE பண்ணுங்க!

News September 4, 2025

தஞ்சையில் கூட்டுறவு வங்கிகளில் கடன் தீர்வு திட்டம்

image

தஞ்சாவூா் மண்டலத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்ட கடன்கள் 2022, டிசம்பா் 31ஆம் தேதியில் முழுமையாக தவணை தவறி நிலுவையில் உள்ள கடன்களுக்கு சிறப்புக் கடன் தீா்வுத் திட்டம் 2023 செயல்படுத்தப்பட்டு வருகிறது. செப்டம்பர் 23 க்குள் கூட்டுறவு சங்கங்களை அணுகி பயன்பெறுமாறு தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் கேட்டுக் கொண்டுள்ளார். SHARE IT

error: Content is protected !!