News August 31, 2025
விருதுநகர் மருத்துவமனையில் கத்தியுடன் புகுந்த கும்பல்

விருதுநகர் அரசு மருத்துவமனையில் நுரையீரல் உள்நோயாளிசிகிச்சை பிரிவில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 4 பேர் கத்தியுடன் புகுந்து ஒருவரை தேடியுள்ளனர். இதனால் நர்சுகள், நோயாளிகள் அலறினர். பின்னர் நாங்கள் தேடி வந்த ஆள் இங்கு இல்லை எனக்கூறி வெளியே சென்றனர். இது குறித்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பும் இங்கு இது போன்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 4, 2025
BREAKING சிவகாசி: பட்டாசு விற்பனை அதிரடி உத்தரவு

ஆன்லைன் பட்டாசு விற்பனை குறித்து விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் தலைவர் வழக்கு தொடர்ந்தார். அதில் அன்லைன் பட்டாசு விற்பனை குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் தெரிவித்தது. ஆன்லைன் பட்டாசு விற்பனை செய்வது உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் செயல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 4, 2025
சிவகாசியில் தர்பூசணி பட்டாசு அறிமுகம்

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி பணிகள் சூடுபிடித்துள்ளது. இதனிடையே வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு புதிய வடிவிலான பட்டாசுகள் அறிமுகப்படுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது தர்பூசணி வடிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தத்துருவமாக தர்பூசணி போல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பட்டாசுகள் வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
News September 4, 2025
சிவகாசி பட்டாசு ஆலையில் தீ விபத்து

சிவகாசி அருகே நாரணாபுரம் பகுதியில் பிரதாப் மான்சிங் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் நாரணாபுரம் புதூரை சேர்ந்த முருகன் மனைவி காயத்ரி என்பவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று வழக்கம் போல் அவர் பேப்பர் கேப்ஸ் என்ற பட்டாசை பாக்கெட் செய்த போது திடீரென உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் காயத்ரிக்கு தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.