News August 31, 2025
விழுப்புரத்தில் இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு: 3,000 பேர் எழுதுகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 3,000 பேர் இன்று(ஆக.31) டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்காக விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி, வி.ஆர்.பி மேல்நிலைப்பள்ளி மற்றும் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தேர்வு மையம் அமைக்கபட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார். தேர்வெழுத உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க
Similar News
News September 3, 2025
விழுப்புரம்: B.Sc, B.C.A, M.Sc படித்தவர்களுக்கு உள்ளூரில் அரசு வேலை

விழுப்புரம் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில், தகவல் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.Sc, B.Sc. IT, B.C.A, M.Sc, படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.20,000 தொகுப்பூதியமாக வழங்கப்படும். உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News September 3, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப்.3) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்
▶️ மயிலம்
▶️ அய்யன்கோயில்பட்டு, கோலியனூர்
▶️ அருங்குறுக்கை, திருவெண்ணெய்நல்லூர்
▶️ முகையூர்
▶️ நடுக்குப்பம், கோட்டக்குப்பம்
▶️ அனந்தபுரம்
பொதுமக்கள் நேரில் சென்று மனு அளித்து பயன்பெறலாம்
News September 3, 2025
தாம்பரம் – விழுப்புரம் ரயில் சேவை பகுதியாக ரத்து.

பராமரிப்புப் பணிகள் காரணமாக, தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்கு விழுப்புரம் செல்லும் மெமு ரயில் செப்டம்பர் 6, 9, 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் முண்டியப்பாக்கத்துடன் நிறுத்தப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதே நாள்களில், விழுப்புரத்திலிருந்து நண்பகல் 1.40 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் மெமு ரயில் விழுப்புரம் என்பதற்குப் பதிலாக முண்டியப்பாக்கத்திலிருந்து புறப்படும்.