News August 30, 2025
பள்ளியில் குழந்தை பெற்ற 9-ம் வகுப்பு மாணவி

கர்நாடகாவில் அரசு பள்ளி பாத்ரூமில் 9-ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுதியில் தங்கி படித்துவரும் அந்த மாணவியை, இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததால் கர்ப்பமானதாகக் கூறப்படுகிறது. ஆனால், கர்ப்பமானதை மறைத்த அவர், பள்ளிக்கு சென்றபோது வலி ஏற்பட்டு அங்கேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தற்போது, இளைஞரை கைது செய்து போலீஸ் விசாரித்து வருகிறது.
Similar News
News September 1, 2025
விஜய்யுடன் கூட்டணியா? OPS சொன்ன பதில்

தவெகவுடன் ஓபிஎஸ் கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த OPS, ‘எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்’ என்றார். OPS-ன் இந்த பதில், அவர் விஜய்யுடன் கூட்டணி அமைக்க தயாராக உள்ளதையும், NDA கூட்டணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை எனில், அவர் இந்த ஆப்ஷனுக்கு வருவார் எனவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
News September 1, 2025
இந்தியாவில் சாதி மோதலை தூண்ட முயலும் அமெரிக்கா?

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் பிராமணர்கள் பயனடைகிறார்கள் என டிரம்பின் ஆலோசகர் பீட்டர் நவாரோ சர்ச்சை கருத்தை கூறியுள்ளார். மேலும், ரஷ்யா-உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியா மறைமுக நிதி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது, USA-வின் வரி விதிப்பிற்கு எதிரான இந்தியாவின் எதிர்வினைகளை தாங்க முடியாமல், சாதி கலவரத்தை தூண்ட முயலும் செயல் என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
News September 1, 2025
உங்கள் மகளுக்கு 21 வயதில் ₹60 லட்சம் கிடைக்கும் சூப்பர் திட்டம்

பெண் பிள்ளை வைத்திருப்போரின் பெரிய கவலையே எப்படி அவர்களுக்கு பணம்/நகை சேர்ப்பது என்பதுதான். மத்திய அரசின் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் மூலம் உங்கள் மகளுக்கு 21 வயதாகும் போது அதிகபட்சமாக ₹69,27,578 லட்சம் கிடைக்கும். இத்திட்டத்தில் ₹250 – ₹1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். உங்கள் குழந்தைக்கு 10 வயது முடிவதற்குள் அருகில் இருக்கும் வங்கியை அணுகி இத்திட்டத்தில் சேருங்கள். SHARE.