News August 30, 2025

மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம்

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் நெடுஞ்சாலை துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று ஆகஸ்ட் 30 ஆம் தேதி நடைபெற்றது. மேலும் நெடுஞ்சாலைத்துறையின் அனைத்து அலகு அலுவலர்கள் (ம) தேசிய நெடுஞ்சாலைக்கு உட்பட்ட (NHAI) அனைத்து அலகு அலுவலர்களுடன் இக்கூட்டம் நடைபெற்றது.

Similar News

News September 1, 2025

திருவள்ளூர்: கேஸ் சிலிண்டர் இருக்கா? இதை பாருங்க

image

திருவள்ளூர் மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)

News September 1, 2025

முதலமைச்சர் கோப்பை போட்டிகள் மாற்றம்

image

2025 ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்- நிர்வாக காரணத்தினால் கீழ்கண்ட தேதிகளில் மாற்றம் செய்யப் படுகிறது என திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். மேலும் போட்டியில் கலந்து கொள்கிறவர்கள் எந்த தேதியில் மாற்றம் செய்யப்பட்டது என மேலேயுள்ள படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

News September 1, 2025

திருவள்ளூர்: 8th போதும்; சொந்த ஊரில் அரசு வேலை.. APPLY

image

திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, திருத்தணி, புழல், சோழவரம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர் உள்ளிட்ட பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 8ம் வகுப்பு தேர்ச்சி போதும். மாதம் ரூ.15,700-50,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இன்று முதல் செ.30ம் வரை இந்த லிங்கில் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!