News August 30, 2025
11 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட லாரி

தாம்பரம் குரோம்பேட்டையில் ஜி.எஸ் சாலையில் நேற்று இரவு சிமென்ட் லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 11 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மூன்று கிரேன்கள் உதவியுடன் லாரி மீட்கப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகினர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Similar News
News September 27, 2025
செங்கல்பட்டு: பண்டைய பீரங்கி குண்டுகள் கண்டெடுப்பு!

செங்கல்பட்டு மாவட்டம் வள்ளிபுரம் பாலாற்றில், செய்யாறு கல்லூரி வரலாற்றுத் துறை விரிவுரையாளர் மதுரை வீரன், கள ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் பண்டைய கால பீரங்கி குண்டுகள், கல் குண்டு, கைத்துப்பாக்கி ஈய குண்டு, போர் வீரரின் ஆடை பொத்தான் ஆகியவற்றை அவர் கண்டெடுத்துள்ளார். இந்தக் கண்டுபிடிப்புகள் அப்பகுதியின் வரலாற்றை அறிய உதவுகின்றன. இந்த தகவலை பிறரும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.
News September 27, 2025
கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க உத்தரவு

செங்கல்பட்டு மாவட்டத்தில், சொர்ணவாரி பருவத்தில், 35,068 ஏக்கருக்கு நெல் நடவு செய்யப்பட்டது. தற்போது, ஒரு சில இடங்களில் அறுவடை நடைபெற்று வருகிறது
செங்கல்பட்டு மாவட்டத்தில், சொர்ணவாரி பருவத்திற்கு கூடுதலாக ஆறு இடங்களில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க, கலெக்டர் சினேகா உத்தரவிட்டுள்ளார்.மத்திய அரசின் நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், சொர்ணவாரி பருவத்தில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
News September 26, 2025
சிட்லபாக்கம் ஏரியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தாம்பரம் அருகேயுள்ள சிட்லப்பாக்கம் ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மைபடுத்தும் பணியினை மாவட்ட ஆட்சியர் தி.சினேகா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவ்வப்போது ஏரியில் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது தாம்பரம் மாநகராட்சி ஆணையர் சீ.பாலச்சந்தர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.