News August 29, 2025

அலர்ட்.. தமிழகத்தில் புயல் சின்னம்.. கனமழை வெளுக்கும்

image

வங்கக் கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாக IMD கணித்துள்ளது. இதற்கிடையே, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளையும் கனமழை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 3 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளியே செல்பவர்கள் கவனமா இருங்க!

Similar News

News September 2, 2025

கமல் அப்பவே அப்பிடி: லோகேஷ் ருசிகரம்

image

கமல்ஹாசன் எப்போதுமே தமிழ் சினிமாவை தொலைநோக்கு பார்வையுடன் பார்ப்பவர் என்ற கருத்து சினிமா வட்டாரத்தில் பேசப்படுவது உண்டு. இதனை ஆமோதிக்கும் வகையில் லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார். சமீபத்திய பேட்டியில், 15 ஆண்டுகளுக்கு முன்பு OTT குறித்து பேசியவர் தான் கமல் என்றார். அப்போது நமக்கு OTT பற்றி தெரியாது. ஆனால், இப்போது OTT இல்லாமல் படமே ரிலீஸ் ஆகாது என்ற நிலையில் உள்ளோம் என்றார். உங்கள் கருத்து என்ன?

News September 2, 2025

மூளையைத் தின்னும் அமீபா: அரசு முக்கிய உத்தரவு

image

கேரளாவில் ஆகஸ்டில் மட்டும் மூளையைத் தின்னும் அமீபா பரவலால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சென்னை, அதன் அண்டை மாவட்டங்கள் மற்றும் மேற்குதொடர்ச்சிமலை அடிவார மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அத்துடன் நன்னீரில் உள்ள அமீபா பரவலால் இத்தொற்று ஏற்படும் என்பதால், மாநகராட்சி, நகராட்சி மற்றும் நட்சத்திர ஓட்டலில் உள்ள குளங்களை ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

News September 2, 2025

ஊழல் பணத்தை பிரிப்பதில் திமுகவில் தகராறு: EPS

image

தமிழகம் முழுவதும் பல மாநகராட்சிகளில் ஊழல் செய்த பணத்தை பிரிப்பதில் திமுகவினரிடையே தகராறு ஏற்படுவதாக EPS கடுமையாக விமர்சித்துள்ளார். இதனால் திமுக கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். மதுரையில் மேற்கொண்ட தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், மக்களின் பிரச்னைகளை தெரியாதவர்கள் எல்லாம் அமைச்சர்களாக உள்ளதாக சாடினார்.

error: Content is protected !!