News April 9, 2024

தேர்தல் புறக்கணிப்பு பேனரால் பரபரப்பு

image

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஒத்தப்பட்டியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாம்பலாயி அம்மன் கோவில் உள்ளது. இங்கு புதுப்பிக்கும் பணிகள் நடந்து வந்தது. தனி நபர் ஒருவரால் உயர்நீதிமன்றத்தில் வழக்கின் அடிப்படையில் முற்றிலும் கோவில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்து கருப்பு கொடி கட்டி பேனர் வைத்து எதிர்ப்பை பதிவு செய்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News

News March 17, 2026

கரூர் மாவட்டத்திற்கு இனி இவர் தான் எஸ்.பி!

image

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஜோஸ் தங்கையா நேற்று, திடீர் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், புதிய காவல் கண்காணிப்பாளராக ஹரிஹரன் பிரசாத் இன்று (17.03.2026) புதிய கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய காவல் கண்காணிப்பாளருக்கு அரசு அலுவலர்கள், அரசியல் கட்சியினர், காவல் அதிகாரிகள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

News March 17, 2026

கரூர்: சிலிண்டர் பதிவு செய்ய முக்கிய UPDATE !

image

கருர் மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <>Aadhar FaceRD<<>> செயலி (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

News March 17, 2026

கரூர்: தவெகவினரை தூக்கிய செந்தில் பாலாஜி

image

கரூர் மாவட்டம், கரூர் வடக்குப் பகுதி திமுக செயலாளர் பாண்டியன் முன்னிலையில், கரூர் வடக்குப் பகுதி, 8 வது வார்டை சேர்ந்த த.வெ.க கட்சியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி, கரூர் திமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் தங்களை தி.மு.கழகத்தில் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

error: Content is protected !!