News August 29, 2025
தர்மபுரி மாவட்டத்தில் இன்றே கடைசி நாள்

தமிழ்நாடு கூட்டுறவு சங்கம் மற்றும் வங்கிகள் உள்ள 2581 உதவியாளர் காலி பணியிடங்களில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 104 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 29 இன்று கடைசி நாள் மாலை 5:45 மணி வரை http://www.drbcud.in என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பினை தருமபுரி மாவட்ட படித்த இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 2, 2025
மாணவருக்கு ஆட்சியர் நிதியுதவி

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பூதனஅள்ளி கிராமத்தை சேர்ந்த செல்வன்.ஆத்திஷ்குமார் த/பெரியசாமி என்பவருக்கு தொழிற்கல்விப் பயில முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50,000/-த்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இன்று (01.09.2025) வழங்கினார்.
News September 1, 2025
இரவு நேர ரோந்துப் பணி விவரம்

தர்மபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (01.08.2025) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர், ராஜ்குமார் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சிவபெருமான் , தோப்பூரில் குமரவேல் , மதிகோன்பாளையத்தில் மாது ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க.
News September 1, 2025
தர்மபுரி: கேஸ் சிலிண்டர் இருக்கா? இதை பாருங்க

தர்மபுரி மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)