News August 29, 2025

விழுப்புரம்; விவசாயிகளுக்கு கடைசி வாய்ப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில், காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வேளாண்மை இணை இயக்குநர் சீனிவாசன் அழைப்பு விடுத்துள்ளார். நிலக்கடலை மற்றும் கம்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் ஆகஸ்ட் 30-க்குள் காப்பீடு செய்யலாம். நிலக்கடலைக்கு ஏக்கருக்கு ரூ.623.75 பிரீமியம் செலுத்தினால், காப்பீட்டு தொகை ரூ.31,187.37 கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம். SHARE

Similar News

News September 1, 2025

விழுப்புரம்: பட்டா விவரங்களை வீட்டில் இருந்தே பார்க்கலாம்

image

விழுப்புரம் மக்களே இனி எந்தவொரு வருவாய்த் துறை அலுவலத்திற்கும் நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பட்டா மாறுதல் விண்ணப்பிக்க, பட்டா- சிட்டா புலப்பட விவரங்களை பார்வையிட அதை சரி பார்க்க, மேலும் பட்டா விண்ணப்பித்தலின் நிலையை <>இந்த லிங்கில்<<>> சென்று இனி வீட்டில் இருந்தே பார்த்துக்கொள்ளலாம். பட்டா பற்றிய அணைத்து வகையான தகவலும் இந்த இணையத்தில் உள்ளது. இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கு பகிருங்கள்.

News September 1, 2025

விழுப்புரத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்.

image

விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் நகராட்சி, விக்கிரவாண்டி, கண்டமங்கலம், மேல்மலையனூர் மற்றும் செஞ்சி ஒன்றியங்களில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் மருத்துவக் காப்பீடு, ஆதார் சேவை, இ-சேவை, மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட உள்ளன. பொதுமக்கள் இந்த முகாம்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் கேட்டுக்கொண்டுள்ளார்

News September 1, 2025

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு வழங்கினார்கள்

image

விழுப்புரத்தில் இன்று (செப்.01) விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து கிராம பொதுமக்களும் தங்களுடைய கோரிக்கைகளை துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனுவாக வழங்கினார்கள். இதில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!