News August 29, 2025
தஞ்சை மாவட்டத்தில் நாளை மின்தடை

தஞ்சை மாவட்டத்தில் நாளை (ஆக.30) பல்வேறு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. தஞ்சை, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளி, கும்பகோணம், திருமலைசமுத்திரம், சேதுபாவாசத்திரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
Similar News
News September 1, 2025
தஞ்சை: இதனை அறிந்திருப்பது மிக நல்லது!

தஞ்சை மக்களே நீங்கள் வாங்கும் பொருள் அல்லது சேவையில் குறைகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? பணம் கொடுத்து வாங்கிய பொருளில் காலாவதியானவை, போலியானவை போன்ற குறைகள் இருந்தால், வாங்கிய பொருளின் Bill-யை வைத்து சட்டப்படி தஞ்சை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளிப்பதன் மூலம் உரிய இழப்பீடு பெற முடியும். இதனை அனவருக்கும் SHARE பண்ணுங்க. நீங்களும் விழிப்புணர்வுடன் இருங்கள்!
News September 1, 2025
தஞ்சை: தெரு நாய்கள் தொல்லையா? இத செங்க!

தமிழகத்தில் அண்மைக்காலமாகத் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துக் காணப்படுகிறது. மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெரு நாய்கள் கடிக்கு ஆளாகின்றனர். இனி தெருக்களில் கூட்டம் கூட்டமாகத் திரியும் தெரு நாய்களைக் கண்டு அச்சமடையவோ, கவலையோ வேண்டாம் உங்கள் பகுதியில் தெரு நாய்கள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க 1100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்!
News September 1, 2025
10 மற்றும் +2 மாணவர்களுக்கு கற்றல் கையட்டினை வெளியிட்ட ஆட்சியர்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவியர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் வகையில் மாணவ-மாணவியர்களுக்கான “கற்றல் கையேட்டினை” தலைமையாசிரியர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் இன்று வழங்கினார்கள்.