News August 28, 2025

ஈரோடு: மக்களே காய்ச்சலைத் தவிர்க்க இதைச் செய்யுங்கள்

image

ஈரோட்டில் பருவகால காய்ச்சல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் குடிநீரை கொதிக்கவைத்து குடிக்க வேண்டும், என மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர். 3 நாளுக்கும் மேலாக காய்ச்சல், இருமல் இருந்தால் உடனே மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். வீடுகளுக்கு அருகில் தண்ணீர் தேங்காதவாறு சுத்தமாக வைத்திருக்கவும், கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Similar News

News August 29, 2025

ஈரோடு: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெரும் இடங்கள்

image

ஈரோடு மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ அரசு பொது சேவை முகாம் நாளை (ஆக. 29) நடைபெற உள்ளது. இந்த முகாம் ஈரோடு மாநகராட்சி மண்டலம்-3 (தமிழ்நாடு ஹவுசிங் போர்டு அலுவலகம், சூரம்பட்டி 4 ரோடு), சத்தியமங்கலம் நகராட்சி (வன்னியர் மஹால்), பெத்தாம்பாளையம் தொகுதி (ஆண்டவர் திருமண மண்டபம்), நம்பியூர் பிளாக் (பெருமாள் கோவில் மண்டபம், வேமாண்டம்பாளையம்) ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

News August 28, 2025

ஈரோடு: ரூ.25,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு!

image

ஈரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Maraketing excutive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

News August 28, 2025

ஈரோடு: புலனாய்வு துறையில் வேலை!

image

ஈரோடு மக்களே, வெளியுறவு துறையின் கீழ் புலனாய்வு பிரிவில் காலியாக உள்ள 394, ஜூனியர் புலனாய்வு அதிகாரி (Intelligence Officer Grade-II) பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிகிரி முடித்திருந்தால் போதும், மாதம் ரூ.25,500 முதல் அதிகபடியாக ரூ.81,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 14.09.2025 தேதிக்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!