News August 28, 2025

மாணவர்கள் இனி ஃபோன் பயன்படுத்த தடை

image

தென்கொரியாவில் மாணவர்களிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவதால், பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு போன்றவற்றில் சிக்குவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், 2026 முதல் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல தமிழகத்திலும், பள்ளியில் இருந்து வந்தவுடன் மாணவர்கள் செல்போனே கதி என இருக்கின்றனர். இதனை அரசு எப்படி கையாளலாம்? கமண்ட்ல சொல்லுங்க.

Similar News

News March 19, 2026

கட்சி தாவிய ஒரு நாளில் தேர்தலில் போட்டியிட சீட்

image

அசாம் மாநிலத்தில் வரும் 9-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 88 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதில், அசாம் CM ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஜலுக்பரி தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல், காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த MP பிரத்யுத் போர்டோலோய்-க்கு ஒரே நாளில் தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளது. அவர் திஸ்பூர் தொகுதி வேட்பாளராக களமிறங்குகிறார்.

News March 19, 2026

HDFC சேர்மன் பதவி விலகினார்.. மிகப்பெரிய இழப்பு!

image

HDFC வங்கியின் பகுதிநேர சேர்மன் அசோக் சக்ரவர்த்தியின் ராஜினாமா பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘நிஃப்டி50’-ல் முன்னணி வகிக்கும் HDFC-யின் பங்குகள் 5% சரிவை சந்தித்ததுடன், நிஃப்டியும் 2.5% சரிந்துள்ளது. நிறுவனத்தின் அண்மை செயல்பாடுகள், தனது தனிப்பட்ட விழுமியங்கள் & அறநெறிகளுடன் ஒத்துப்போகாததால் விலகியதாக அவர் கூறியுள்ளது, முதலீட்டாளர்கள் நம்பிக்கையை பாதித்துள்ளதே சரிவுக்கு காரணம்.

News March 19, 2026

+2 மாணவி வன்கொடுமை: இளைஞர் அதிரடி கைது

image

தூத்துக்குடி, விளாத்திகுளத்தில் +2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாகக் கூறி 30 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சாயல்குடியை சேர்ந்த முனீஸ்வரனை செல்போன் சிக்னல் மூலம் தனிப்படை போலீசார் பிடித்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. குற்றவாளியை கைது செய்யாமல் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி மாணவியின் உறவினர்கள் 9 நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!