News August 28, 2025
மாபெரும் தமிழ் கடவுள் சொற்பொழிவு நிகழ்ச்சி

திருவண்ணாமலையில் ஆகஸ்ட் 29ஆம் தேதி மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்சியில் கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் சொற்பொழிவாளர் பாரதி கிருஷ்ணகுமார் நிலம் பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். தமிழகம் முழுவதும் 17 மாவட்டங்களில் இந்நிகழ்வு நடைபெறும். அந்தந்த மாவட்டத்தில் சொற்பொழிவாற்ற உள்ளவர்கள் கைபேசி எண், நடைபெறும் இடமும், தலைப்பும் படத்தில் உள்ளது.
Similar News
News August 29, 2025
திருவண்ணாமலை ராஜகோபுரம் முன் கடைகளுக்கு தடை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பு எந்த வகை கட்டுமானங்களும் அனுமதி இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் உத்தரவிட்டுள்ளனர். பக்தர்களுக்கான மாற்றுத் திட்டம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலைத்துறைக்கு அவகாசம் வழங்கப்பட்டு, வழக்கு விசாரணை செப்டம்பர் 11-க்கு தள்ளிவைக்கப்பட்டது.
News August 29, 2025
திருவண்ணாமலை காவல் ஆய்வாளர்கள் இரவு நேரம் ரோந்து பணி பட்டியல்

திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை காவல் துறையில் இன்று இரவு ரோந்து பணிக்காக காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளன. மற்றும் எந்தவித ஆபத்தான நிலையிலும் காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். அதனை அடுத்து இந்த ரோந்து பணி பெரும் ஆபத்தான நிலையிலும் காவல் ஆய்வாளர்கள் பணி செய்து கொண்டிருக்கின்றார்கள். இதன் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
News August 28, 2025
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (28.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.