News August 28, 2025

விருதுநகர்: மாதம் ரூ.1,200 வேண்டுமா? உடனே APPLY!

image

தமிழ்நாடு அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டுமான தொழில், கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் நலன் கருதி ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த ஓய்வூதியம் ரூ.1000இல் இருந்து ரூ.1200ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த <>லிங்கை கிளிக்<<>> செய்தோ (அ) விருதுநகர் மாவட்ட தொழிலாளர் நல வாரியத்தை நேரில் அணுகியோ இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து தொழிலாளர்கள் நலன் காத்திட உதவுங்கள்.

Similar News

News March 4, 2026

விருதுநகர்: சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு; ஒருவர் கைது

image

ஆலங்குளம் செல்லும் சாலையில் உள்ள கிளியம்பட்டி பகுதியில் மாரனேரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வசித்து வரும் கருப்பசாமி என்பவர் தனது கார் செட்டில் சட்ட விரோதமாக பட்டாசுகளை தயாரித்து வந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் பட்டாசு தயாரிக்க வைத்திருந்த மூலப்பொருட்களையும், தயாரிக்கப்பட்ட பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனர்.

News March 4, 2026

விருதுநகர்: 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

வெம்பக்கோட்டை அருகே மஞ்சலோடைப்பட்டியை சேர்ந்தவர் மகேந்திரன் (24). இவர் வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமிகள் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் இளைஞர் மகேந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 4, 2026

கே.டி.ஆர் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

image

பண மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் ஶ்ரீவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை தள்ளுபடி செய்ய கோரி குற்றப்பிரிவு போலீசார் பதில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனு மீதான வழக்கு விசாரணையை மார்ச்.13-ம் தேதிக்கு ஒத்திவைத்து முதன்மை மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.

error: Content is protected !!