News August 28, 2025
தி.மலையை புகழ் பெற செய்த ஆன்மிகவாதி

தி.மலையை உலக அளவில் புகழ் பெற செய்தவர்களில் ரமண மகரிஷியும் ஒருவர். 1879ல் விருதுநகரில் பிறந்து 13 வயதில் ஆன்மிக நாட்டம் கொண்டு தி.மலை வந்து, தனது ஆன்மிக போதனைகள் மூலம் மக்களை கவர்ந்தார். பல நாட்டு மக்களும், ஆன்மீக நாட்டம் கொண்டவர்களும் இவரை நாடி வந்து சீடர்களானார்கள். இன்றும் தி.மலையில் உள்ள ரமண மகரிஷி ஆஸ்ரமத்திற்கு உலகின் பல பகுதிகளில் இருந்து வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
Similar News
News August 28, 2025
தி.மலை மாவட்டத்தில் அரசு வேலை; 100+ காலி பணியிடங்கள்

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கியில் உள்ள 2,581 உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் தி.மலை மாவட்டத்தில் மட்டும் 109 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்த 18- 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு 23,640- 96,395 சம்பளம் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு <
News August 28, 2025
முதலமைச்சர் கோப்பைக்கான போட்டி விவரங்கள்

நாளை (29-08-2025) தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் திருவண்ணாமலை மாவட்ட அளவில் மேசைப் பந்து, கூடைப்பந்து போட்டிகள் பள்ளி மாணவிகளுக்கு மட்டும் நடைபெற உள்ளது. இப்போட்டிகள் அனைத்தும் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்று மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
News August 28, 2025
மாபெரும் தமிழ் கடவுள் சொற்பொழிவு நிகழ்ச்சி

திருவண்ணாமலையில் ஆகஸ்ட் 29ஆம் தேதி மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்சியில் கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் சொற்பொழிவாளர் பாரதி கிருஷ்ணகுமார் நிலம் பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். தமிழகம் முழுவதும் 17 மாவட்டங்களில் இந்நிகழ்வு நடைபெறும். அந்தந்த மாவட்டத்தில் சொற்பொழிவாற்ற உள்ளவர்கள் கைபேசி எண், நடைபெறும் இடமும், தலைப்பும் படத்தில் உள்ளது.