News August 28, 2025

பள்ளிகளில் ஆதார் முகாம்கள் நடத்த உத்தரவு

image

பள்ளிக் குழந்தைகளுக்கான ஆதார், ‘பயோ மெட்ரிக்’ அடையாளத்தை புதுப்பிக்க முகாம்களை கட்டாயமாக நடத்தும்படி மாநில அரசுகளுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) அறிவுறுத்தியுள்ளது. இதற்காக பள்ளிகளுக்கு என பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதில், 5 – 15 வயது வரையிலான பள்ளி குழந்தைகளின் கைரேகை, மற்றும் கண் கருவிழிப் படலம் பதிவு செய்து புதுப்பிக்கப்பட உள்ளது.

Similar News

News August 28, 2025

‘அம்மா GOOD BYE.. நான் சாகப்போறேன்’..சோக முடிவு

image

‘அம்மா நான் சாகப்போறேன். இறந்த பின் யாருக்கேனும் தேவைப்பட்டால் எனது உடலை தானம் செய்யுங்கள். எனது அறை மற்றும் உடைமைகளை தம்பிக்கு கொடுத்து விடுங்கள்’. ம.பி.யில் தூக்கிட்டு தற்கொலை செய்வதற்கு முன்பு 7-ம் வகுப்பு மாணவி எழுதிய கடிதம் இது. பாட புத்தகத்தை தவறவிட்டதால் அம்மா திட்டியுள்ளார். இதனால், மனமுடைந்த மாணவி விபரீத முடிவெடுத்துள்ளார். தற்கொலை எதற்கும் தீர்வல்ல நண்பர்களே..!

News August 28, 2025

TNPSC குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

image

டிஎஸ்பி, துணை ஆட்சியர், வணிக வரி உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட பணிகளுக்கான குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. 70 காலிப் பணியிடங்களுக்கான இத்தேர்வை கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி 2.27 லட்சம் பேர் எழுதினர். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் முதன்மைத் தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு முடிவுகளை அறிய <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க.

News August 28, 2025

கோர்ட் கதவை தட்டிய கேமிங் நிறுவனங்கள்

image

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை எதிர்த்து, முன்னனி ஆன்லைன் கேமிங் நிறுவனமான A23 கர்நாடகா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இது வரும் 30-ம் தேதி அவசர வழக்காக விசாரிக்கப்பட உள்ளது. கடந்த 20-ம் தேதி லோக் சபாவில் நிறைவேற்றப்பட்ட இம்மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததால் தற்போது சட்டமாகியுள்ளது. இதன்படி, ஆன்லைன் கேமிங் சேவைகளை வழங்கினால் 3 ஆண்டுகள் சிறை, ₹1 கோடி அபராதம் விதிக்கப்படும்.

error: Content is protected !!