News August 28, 2025
எண்டோஸ்கோப்பிக் அறுவை சிகிச்சையில் சாதனை

சில நாட்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் மூக்கின் வழியாக மூளை நீர் வடிதலிற்கான சிகிச்சை மேற்கொள்ள திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு வந்தார்.முதியவருக்கு எண்டோஸ்கோப்பிக் என்னும் அரிதான அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். சிகிச்சைக்கு பின் முதியவர் நலமுடன் வீடு திரும்பினார். இது மாதிரியான அறுவை சிகிச்சை முதன்முறையாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் நடந்துள்ளது.
Similar News
News August 28, 2025
திருவள்ளூர்: 6 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பூங்கா நகர், ரோஜா தெரு பகுதியில் நேற்று காலை சாலையில் நடந்த சென்ற சிறுவன் நிஷாந்தை (6) தெரு நாய் துரத்தி அவரது கால், கைகளில் கடித்துள்ளது. பின்னர் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தெருநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
News August 28, 2025
திருவள்ளூர்: பெண் பிள்ளை இருந்தால் ரூ.50,000

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மூலம் பெண் குழந்தைகளை மட்டும் கொண்ட குடும்பங்கள் ரூ.50,000 பெறலாம். இதன்படி குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் ரூ.50,000, 2 பெண் குழந்தை இருந்தால் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ.25,000 வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.1,20,0000க்குள் இருக்க வேண்டும். அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17540105>>தொடர்ச்சி<<>>
News August 28, 2025
திருவள்ளூர்: பெண் பிள்ளை இருந்தால் ரூ.50,000

பெண் குழந்தை பாதுகாப்பு பயன்பெற குடும்பத்தில் பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக் கூடாது. பெற்றோரில் ஒருவர் 40 வயதிற்குள் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். மேலும், வருமானச் சான்றிதழ், பெண்குழந்தைக்கான பிறப்புச் சான்றிதழ், கருத்தடை சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். SHARE செய்யுங்க