News August 28, 2025

லோன் வாங்குபவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

தெருவோர கடைக்காரர்களுக்கான PM Svanidhi கடன் திட்டத்தில் வழங்கப்படும் தவணைக் கடன் ₹5,000 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வரும் 2030-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை திட்டத்தை நீட்டித்தும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதல் தவணை கடன் வரம்பு ₹15,000-ஆகவும், 2-ம் தவணை ₹25,000-ஆகவும், 3-ம் தவணை ₹50,000-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. உரிய காலத்தில் தவணையை செலுத்தினால் சில சலுகைகளும் அளிக்கப்படுகிறது.

Similar News

News August 28, 2025

ஆசியக் கோப்பை: மெளனம் கலைத்த ஷமி

image

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் முகமது ஷமி இடம்பெறாதது பேசுபொருளானது. இதுதொடர்பாக பேசிய அவர், துலீப் டிராபி தொடரில் தன்னால் ஒரு போட்டியில் 5 நாள்கள் விளையாடும்போது ஆசிய கோப்பை தொடரில் விளையாட முடியாதா என கேள்வி எழுப்பினார். இருப்பினும், இந்திய அணியின் வெற்றிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வது தேர்வுக் குழுவின் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார். ஷமியை தேர்வு செய்யாதது பற்றி என்ன நினைக்கிறீங்க?

News August 28, 2025

PM மோடியின் தாயாரை இழிவுபடுத்திய தொண்டர்கள்

image

பிஹாரில் ராகுல் காந்தியின் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் தொண்டர்கள் PM மோடி மற்றும் அவரது மறைந்த தாயாரை மிகவும் தரக்குறைவாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் ஒருபோதும் இதுபோன்ற தரக்குறைவான விமர்சனங்களை ஏற்காது என்று கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால், இதை சகித்துக் கொள்ள முடியாது எனவும், ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தியுள்ளது.

News August 28, 2025

கலவர வழக்கில் 22 பேர் குற்றவாளிகள்

image

கடந்த 2015-ல் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஷமீல் அஹமது உயிரிழந்த விவகாரத்தில், 1000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது கலவரமாக மாறியது. இந்நிலையில், இதுதொடர்பாக 6 கட்டங்களாக பதியப்பட்ட வழக்கில் 22 பேரை குற்றவாளிகளாக அறிவித்துள்ள திருப்பத்தூர் கோர்ட், 161 பேரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் இஸ்லாம் பாஷாவின் சொத்துகளை முடக்குமாறும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!