News April 9, 2024
இந்தியா-பாக்., பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக் காண வேண்டுமென சவுதி வலியுறுத்தியுள்ளது. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபை நேற்று நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பின்போது, ஆசியப் பகுதியில் அமைதி & ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவது தொடர்பாக இருவரும் விவாதித்தாக தெரியவந்துள்ளது.
Similar News
News August 12, 2025
ராகுல் காந்தி கைதுக்கு கமல் கண்டனம்

வெளிப்படைத்தன்மை கேட்டு போராடிய MP-க்களை கைது செய்தது ஜனநாயகத்தையே ஸ்தம்பிக்கச் செய்வதற்கு சமம் என MP கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி கைதை கண்டித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், வாக்களிப்பின் உண்மைத்தன்மை கேள்விக்குறியாகும் போது, அது வெறும் அரசியல் சச்சரவு அல்ல, சுதந்திரம், கண்ணியம், நீதியின்பால் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு இந்தியருக்கும் தார்மீக நெருக்கடி என குறிப்பிட்டுள்ளார்.
News August 12, 2025
இந்தியா கூட்டணியினருக்கு இரவு விருந்தளித்த கார்கே

இந்தியா கூட்டணியை சேர்ந்த முக்கிய தலைவர்களுக்கு காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரவு விருந்தளித்தார். இதில், சரத் பவார், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், திமுகவை சேர்ந்த கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட பல கூட்டணி கட்சி நிர்வாகிகளும், கூட்டணியில் இடம்பெறாத ஆம் ஆத்மி கட்சி பிரமுகர்களும் பங்கேற்றனர்.
News August 12, 2025
ஆகஸ்ட் 12: வரலாற்றில் இன்று

*1948 – கர்நாடகா முதல்வர் சித்தராமையா பிறந்தநாள்.
*1979 – தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் ஏ.வி.மெய்யப்பன் மறைந்த நாள்.
*1990 – அம்பாறை, வீரமுனையில் நானூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
*2015 – சீனாவில் தியான்ஜின் மாகாணத்தில் நிகழ்ந்த இரண்டு பெரும் குண்டுவெடிப்புகளில் 173 பேர் உயிரிழந்தனர், 800 பேர் காயமடைந்தனர்.