News August 28, 2025

சட்டவிரோதமாக மது விற்றவர் கைது

image

திருச்சி புலிவலம் பகுதியில் (ஆகஸ்ட் 27) புலிவலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நடுவலூர் பேருந்து நிறுத்தம் அருகே ராபின் (54) என்பவர், டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ராபினை கைது செய்த புலிவலம் போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விற்பனைக்கு வைத்திருந்த 28 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Similar News

News August 28, 2025

திருச்சி மாவட்ட கூட்டுறவுத் துறையில் வேலை!

image

கூட்டுறவு துறையின் கீழ் திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள ’81’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள்<> இங்கே க்ளிக்<<>> செய்து, இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 – ரூ.96,000 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.29) கடைசி நாளாகும். மேலும் தகவலுக்கு மாவட்ட ஆள்சேர்ப்பு உதவி மையத்தை (0431-2420545) தொடர்பு கொள்ளலாம். SHARE NOW!

News August 28, 2025

திருச்சியில் உள்ள அதிசய கிணறு!

image

திருச்சி அடுத்த திருவெள்ளறையில் பல்லவமன்னன் தந்திவர்மன் ஆட்சி காலத்தில், ‘மார்பிடுகு பெருங்கிணறு’ என்ற பெயரில் ஸ்வஸ்திக் வடிவில் படிக்கட்டுகளுடன் கிணறு ஒன்று கட்டப்பட்டுள்ளது. இக்கிணறு கி.பி 800-ஆம் ஆண்டில் வெட்டப்பட்டது. இந்தக் கிணற்றில் இறை உருவ சிற்பங்கள், கல்வெட்டுகள் உள்ளன. ஸ்வஸ்திகா வடிவத்திலுள்ள பண்டைய கிணறு தமிழகத்தில் இங்கு மட்டுமே உள்ளது. இந்த தகவல் தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 28, 2025

சிறுமியை கர்ப்பமாகிய 16 வயது சிறுவன்

image

திருச்சியை சேர்ந்த 16 வயது சிறுவன் 16 வயதுடைய சிறுமியிடம் கடந்த 2024ம் ஆண்டு முதல் நட்பாக பழகியுள்ளார். பின்னர் மார்ச் 15ம் தேதி காதலிப்பதாக கூறியுள்ளார். அதனை தொடர்ந்து இருவரும் பலமுறை தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அச்சிறுமி 2 மாதம் கர்ப்பம் அடைந்ததை அடுத்து, புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!