News August 28, 2025

ஒரு லட்சம் சேலைகளால் உருவான மெகா கணபதி

image

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விசாகப்பட்டினத்தில் சேலைகளை கொண்டு விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளனர். ஒரு லட்சம் சேலைகளை மடித்து அடுக்கி 111 அடி உயர சிலை வடிவமைத்துள்ளனர். இந்த விநாயகரின் பெயர் ‘சுந்தர வஸ்தர மகா கணபதி’. சேலைகளை சூரத், தமிழகம், மேற்கு வங்கத்தில் இருந்து பெற்றுள்ளனர். வழக்கமாக விநாயகர் சிலைகளை தண்ணீரில் கரைப்பார்கள். இங்கு சேலைகளை பக்தர்களுக்கு வழங்க முடிவெடுத்துள்ளனர்.

Similar News

News August 28, 2025

முகூர்த்த தினம்.. கூடுதல் டோக்கன்கள் வழங்க உத்தரவு

image

ஆவணி மாதத்தில் அதிக முகூர்த்த தினங்கள் வருவதால், கூடுதல் டோக்கன்கள் வழங்க பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150, இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதில் 300 டோக்கன்களும் வழங்கப்படும். அதிகளவில் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 சாதாரண டோக்கன்கள், 12 தட்கல் டோக்கன்களோடு 4 கூடுதல் டோக்கன்களும் வழங்கப்படும்.

News August 28, 2025

ஜம்முவில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

image

இன்று அதிகாலையிலேயே நடந்த தீவிரவாத தேடுதல் வேட்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு & காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில் ராணுவத்தினர் மற்றும் அம்மாநில போலீஸார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

News August 28, 2025

விஜய் கட்சியுடன் கூட்டணியா? முடிவில் மாற்றம்

image

மதுரை தவெக மாநாட்டுக்கு பின், விஜய்யை விமர்சித்த <<17535242>>பிரேமலதாவின் <<>>நிலைப்பாட்டில் மனமாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், 20 சீட்டுக்கு மேல் கேட்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், ‘கூட்டணி ஆட்சி’ என்ற மையப் புள்ளியை வைத்து, விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்க பிரேமலதா முயற்சி செய்வதாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!