News August 27, 2025
புதுகை: ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் கடன் உதவி

புதுகை மக்களே மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ. 3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!
Similar News
News August 28, 2025
புதுகை இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் (ஆகஸ்ட் 27) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம். அல்லது 100ஐ அழைக்கவும். மற்றவர்களுக்கும் இதனை ஷேர் செய்யுங்கள்!
News August 27, 2025
புதுக்கோட்டை: அரசு வேலை; தேர்வு இல்லை!

தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை, நேர்முக தேர்வு மூலமாக நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.40,000 சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்கள் வருகிற செப்.25-ம் தேதிக்குள் இந்த லிங்கை <
News August 27, 2025
திருமயம் அருகே கார் மோதி ஒப்பந்த தொழிலாளர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா பூங்குடியைச் சேர்ந்தவர் குமாரராஜா(31). இவர் திருமயம் பெல் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று பட்டினம் அருகே பைக்கில் சென்றபோது எதிரே வந்த கார் மோதியதில் படுகாயமடைந்து உயிரிழந்தார். இதுதொடர்பாக திருமயம் போலீசார் வழக்குப்பதிந்து கார் டிரைவர் சூரியா(31) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.