News August 27, 2025
BREAKING: விஜய் மீது பதிவானது முதல் கிரிமினல் வழக்கு

மதுரை மாநாட்டில் <<17484937>>தொண்டரை பவுன்சர் தூக்கி வீசிய<<>> சம்பவத்தில் விஜய் மீது முதல் கிரிமினல் வழக்கு பதிவாகியுள்ளது. தவெகவின் சரத்குமார், பெரம்பலூர் SP ஆபிஸில் கொடுத்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். FIR 346/2025-ல் கொலை மிரட்டல், கூட்டு தாக்குதல் உள்ளிட்ட 3 பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக விஜய், மேலும், பவுன்சர்கள் 10 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Similar News
News August 27, 2025
FLASH: பெண் மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் – மகாராஷ்டிரா எல்லையில் உள்ள கட்சிரோலியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 பெண்கள் உள்பட 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இதில், 1 ILR, 2 INSAS ரைபிள்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. மாவோயிஸ்டுகள் ஒழிப்பு நடவடிக்கையில் ஏற்கெனவே நடப்பாண்டில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News August 27, 2025
குடும்பத்திற்கு ₹3,000.. CM ஸ்டாலின் அதிரடி முடிவு

மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தமிழ் புதல்வன் ஆகிய திட்டங்களில் அரசு மாதந்தோறும் தலா ₹1,000 வழங்குகிறது. 2026 பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையில் இவை முக்கிய பங்கு வகிக்க உள்ளன. பெரும்பாலான குடும்பங்களில் அம்மா, மகள், மகன் என 3 பயனாளர்கள் உள்ளதால் ‘குடும்பத்திற்கு ₹3,000 வழங்கும் அரசு’ என்ற பெயரில் பரப்புரையை மேற்கொள்ள திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றி உங்கள் கருத்து?
News August 27, 2025
விஜய்க்கு ஆதரவு.. பிரேமலதா எடுத்த திடீர் முடிவு!

TVK மாநாட்டில் தொண்டர்களை பவுன்சர்கள் தள்ளிவிட்டது எல்லா கட்சியிலும் நடப்பது தான் எனவும் திட்டமிட்டு யாரும் செய்வதில்லை என்றும் விஜய்க்கு ஆதரவாக பிரேமலதா கருத்து தெரிவித்துள்ளார். TN-ல் கூட்டணி ஆட்சி அமைவதை DMDK வரவேற்பதாகவும், அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் போது மக்களுக்கு சிறப்பாக பணியாற்ற முடியும் என தாங்கள் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனை, DMDK, TVK-வுடன் நெருங்குவதாக பலரும் கூறுகின்றனர்.