News August 27, 2025

விழுப்புரம் லாட்ஜில் விபச்சாரம் செய்த மேலாளர் கைது

image

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் சுற்றியுள்ள சில லாட்ஜ்களில் விபசாரம் நடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. புகாரின் பேரில் விழுப்புரம் போலீசார் நேற்று ஆக.26 நள்ளிரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பிரபல லாட்ஜில் சோதனையிட்டபோது 2அழகிகளை வைத்து மேலாளர் தட்சணாமூர்த்தி (45) விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மேலாளர் மற்றும் அவருடன் இருந்து இருவர் என 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News March 6, 2026

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு 12 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 6, 2026

விழுப்புரம் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற 2026 பொது தேர்தலை முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் இன்று (05.03.2026) நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வி.சாய்பிரனித், மாவட்ட வருவாய் அலுவலர் .அரிதாஸ் உட்பட பலர் உள்ளனர்.

News March 5, 2026

மேம்பாலம் பணிகளை ஆட்சியர் ஆய்வு!

image

மரக்காணம் ஒன்றியம் அன்னப்புத்தூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் அன்னப்புத்தூர் – ஓமந்தூர் செல்லும் சாலையில் மேம்பாலம் பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணியை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,இன்று (மார்ச்.05) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

error: Content is protected !!