News August 27, 2025

மேட்டுப்பாளையம் -திருநெல்வேலி ரயில் டிச.1 வரை நீட்டிப்பு!

image

சேலம் ரயில்வே கோட்டம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில் செப்.8 முதல் டிச.1 ஆம் தேதி வரை மேட்டுப்பாளையத்தில் இருந்து திங்களன்று இரவு புறப்படும் மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் மறுநாள் காலை திருநெல்வேலி ரயில் நிலையத்தை சென்றடையும். மறுமார்க்கமாக செப்.7 முதல் நவ.30 வரை திருநெல்வேலியில் ஞாயிறு இரவு புறப்பட்டு மறுநாள் காலை மேட்டுப்பாளையம் வந்தடையும் என அதில் குறிப்பிட்டுள்ளது.

Similar News

News August 27, 2025

கோவை : இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (27.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 27, 2025

துண்டான கை: மீண்டும் பொருத்திய அரசு மருத்துவர்கள்!

image

கோவை பொள்ளாச்சியை சேர்ந்த தங்கமணி (30) குடும்ப தகராறில் தனது வலது கையை இழந்துள்ளார். கை உடனடி மருத்துவ உதவிக்காக பதப்படுத்தப்பட்டு பொள்ளாச்சி ஜிஎச்சில் வைக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி கோவை ஜிஎச் கொண்டுவரப்பட்ட தங்கமணிக்கு சிகிச்சை துவங்கியது. ஆக.22 அதிகாலை 12:15 மணிக்கு மருத்துவர்கள் குழு அறுவை சிகிச்சையை தொடங்கியது. சுமார் 5 1/2 மணி நேரம் போராடி மீண்டும் வெற்றிகரமாக கையை பொருத்தப்பட்டது.

News August 27, 2025

கோவை: ஹவுஸ் ஓனர் தொல்லையா? SAVE பண்ணுங்க!

image

கோவையில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!