News August 27, 2025
புலியகுளம் விநாயருக்கு 4டன் மலர்களால் அலங்காரம்!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் கோவில்களில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று கோவை புலியகுளம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற முந்தி விநாயகர் கோவிலில் விநாயகருக்கு 4 டன் மலர் மாலைகளால் சந்தன காப்புடன் ராஜ அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Similar News
News September 23, 2025
கோவை: பச்சிளம் குழந்தையை விட்டுச் சென்ற இளம்தாய்!

கோவை அரசு மருத்துவமனைக்கு நேற்று(செப்.22) சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பிரசவ வலியுடன் வந்துள்ளார். அவரது பெயர் சூர்யா என தெரிவித்தார். அவருக்கு பிரசவத்தில் ஓர் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், அந்தக் குழந்தையை பிரசவ வார்டிலேயே தவிக்க விட்ட இளம்பெண் மாயமானார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News September 23, 2025
கோவையில் நாளை மின் தடை அறிவிப்பு!

கோவை மக்களே.., மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆர்.எஸ்.புரம், ஆரோக்கியசாமி சாலை, டி.பி.ரோடு, தடாகம் சாலை, காந்தி பார்க், எட்டியார் தெரு, ராஜா தெரு, கவுலிபிரவுன் சாலை சின்னதடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை, ப.நாயக்கன்பாளையம், காட்டம்பட்டி, ஆர்.சி.புரம், நெகமம், வடசித்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 9:00 – மாலை 5:00 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE!
News September 23, 2025
கோவை TNAU-வில் இளமறிவியல் மாணவர் சேர்க்கை 2025-2026

கோவை TNAU இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், TNAU-வில் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் மட்டும் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான உடனடி மாணவர் சேர்க்கை (Spot Admission II) 24.09.2025 அன்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயமுத்தூரில் உள்ள (அண்ணா) அரங்கத்தில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 9488635077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் என்று தெரிவித்துள்ளது.