News August 27, 2025
ராம்நாடு: அரசு பரிசுத்தொகை ரெடி! மரம் வளர்க்க ரெடியா?

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சார்பில் ஓர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், ஆர்வமுள்ள நபர்கள் (அ) அறக்கட்டளைகள் 2 1/2 ஆண்டுகளுக்கு அரசு நிலத்தில் மரம் நடுதலை மேற்கொண்டு பராமரிக்க வேண்டும். இவ்வாறு மரம் வளர்த்தால் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து வெகுமதி (பரிசுத்தொகை) அளிக்கப்படும். மாநில விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்படும். தொடர்புக்கு – 7708633668. நம்ம ஊரை பசுமையாக்க எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News March 4, 2026
ராமநாதபுரம்: அரசு மருத்துவமனை-ல பிரச்னையா..!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா ராமநாதபுரம் மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 04567-220508 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.
News March 4, 2026
முதுகுளத்தூர்: தேர்தலில் போட்டியிட விருப்பமனு வழங்கல்

சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக சார்பில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான விருப்பமனு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (மார்ச்.03) இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டி, முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர், முதுவை பாரூக் விருப்பமனுவை வழங்கினர்.
News March 4, 2026
இராமநாதபுரம்: தெரு நாய்கள் கடித்து பலியான 20 உயிர்கள்

இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள எஸ்.கீரந்தை கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தூா்பாண்டி. விவசாயியான இவா் தனது சொந்த ஊரில் 120 செம்மறி ஆடுகளை வளா்த்து வருகிறாா். அவ்வாறு வளர்க்கப்பட்ட செம்மறி ஆடுகளை நேற்று (மார்ச்.03) தெருநாய்கள் கடித்து 20 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன. தெருநாய்கள் கடித்து இறந்து போன ஆடுகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.


