News April 9, 2024

கிருஷ்ணகிரியில் 500 கிராம் தங்கம், ரூ.30 லட்சம் பறிமுதல்

image

ஒசூர் அருகே தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று வாகனச் சோதனை செய்தபோது அந்த வழியாக வந்த சொகுசு பஸ்ஸை சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுசென்ற ரூ.30 லட்சம் 50 ஆயிரம் ரொக்கம், 500 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் கோவையைச் சேர்ந்த நகை வியாபாரி ராஜ்குமார் என்பவர் ஹைதராபாத்தில் உள்ள தங்க நகைகளை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

Similar News

News July 8, 2025

தேன்கனிக்கோட்டை பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டல்

image

தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் 10 வயதுடைய 5-ம் வகுப்பு மாணவி பள்ளி தலைமை ஆசிரியர் சாரதி, தன்னை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியரை கைது செய்தனர்.

News July 8, 2025

அரசு பள்ளிக்கு விருது வழங்கிய அமைச்சர்

image

கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கல்வி, விளையாட்டு, மாணவர் மேம்பாடு, பள்ளி கட்டமைப்பு, பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடு உள்ளிட்ட அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியது. இதனால் தமிழ்நாடு அரசு மாவட்ட அளவில் சிறந்த தொடக்கப்பள்ளிக்கான பிரிவில் அறிஞர்அண்ணா தலைமைத்துவ விருதினையும், பரிசுத் தொகையாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையினையும் அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்.

News July 7, 2025

கிருஷ்ணகிரி மாவட்டம் இன்று இரவு ரோந்து பணி விவரம்.

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று ( ஜூலை 7) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!