News April 9, 2024

கிருஷ்ணகிரியில் 500 கிராம் தங்கம், ரூ.30 லட்சம் பறிமுதல்

image

ஒசூர் அருகே தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று வாகனச் சோதனை செய்தபோது அந்த வழியாக வந்த சொகுசு பஸ்ஸை சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுசென்ற ரூ.30 லட்சம் 50 ஆயிரம் ரொக்கம், 500 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் கோவையைச் சேர்ந்த நகை வியாபாரி ராஜ்குமார் என்பவர் ஹைதராபாத்தில் உள்ள தங்க நகைகளை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

Similar News

News December 21, 2025

கிருஷ்ணகிரி: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News December 21, 2025

கிருஷ்ணகிரி: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News December 21, 2025

கிருஷ்ணகிரி: மூதாட்டி கொடூர கொலை – தாய், மகன் கைது!

image

சூளகிரி அருகே, கடந்த மார்ச் மாதம், குப்பை சேகரிக்கச் சென்ற முனியம்மாள் மற்றும் அவரது மகன் சின்னராஜ் ஆகியோர், நகையைத் தர மறுத்த மூதாட்டி நாகம்மாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு வீட்டிற்குத் தீ வைத்துள்ளனர். அதைத்தொடர்ந்து வேறொரு கொலை வழக்கில் கைதான சின்னராஜ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தற்போது முனியம்மாளும் கைது செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!