News August 27, 2025
பாபநாச கால்வாய் ஆக்கிரமிப்பு அளவீடு செய்யும் பணி

கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரும் பாபநாச கால்வாய் ஆக்கிரமிப்பை சரி செய்ய நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் பெயரில் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அளவீடு செய்யும் பணிகள் இன்று (ஆக. 26) நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் கவுன்சிலர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News August 27, 2025
குமரி: கந்து வட்டி கேட்டு மிரட்டினால் இதை பண்ணுங்க.!

குமரி மாவட்ட எஸ்.பி.ஸ்டாலின் இன்று (ஆக.27) வெளியிட்டுள்ள அறிக்கையில்; மருங்கூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் மீது அதிக வட்டிப் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக அஞ்சு கிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பொதுமக்கள் கந்துவட்டி தொடர்பான தகவல்களை 8122223319 என்ற எண்ணிற்கு தகவல் அளிக்கலாம். கந்து வட்டி கேட்டு மிரட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News August 27, 2025
குமரி மக்களே, உங்கள் பிரச்சனை தீர சூப்பர் வாய்ப்பு!

குமரி மக்களே, அரசு திட்டங்கள் சரியாக கிடைப்பதில்லையா? அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லையா? கவலை வேண்டாம் முதல்வரின் முகவரி துறையில் (CM Cell) உடனே புகார் செய்யுங்கள். அல்லது 1100 என்ற உதவி எண்ணை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இத்துறை செயல்படுவதால் உங்கள் பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைக்கும். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.
News August 27, 2025
குமரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க.
<<17530837>>தொடர்ச்சி<<>>