News August 27, 2025
டாஸ்மாக் பாரில் 17 ஆயிரம் பணம் கொள்ளை

மேலப்பாளையத்தை அடுத்த கருங்குளம் பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் அருகிலேயே டாஸ்மாக் பார் இயங்கி வருகிறது.நேற்று இரவு கடையில் விற்பனை முடிவடைந்த நிலையில் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் பாரை பூட்டி விட்டு சென்றனர். இன்று காலை வழக்கம் போல் பாரை திறப்பதற்கு ஊழியர்கள் சென்ற போது கதவு உடைக்கப்பட்டு 17,000 ரொக்க பணம் கொள்ளை போயிருந்தது. இதுக்குறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை.
Similar News
News March 12, 2026
நெல்லை: எல்லா சேவைகளுக்கும் இந்த ஒரு LINK போதும்.!

நெல்லை மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை கிளிக் செய்து அனைத்து சேவையையும் இதிலே பெறலாம். மேலும், இந்த சேவையைப் பெற உதவி தேவைப்பட்டால் 9884924299 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Share பண்ணுங்க.
News March 12, 2026
நெல்லையில் அதிரடி கைது

நெல்லை டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மார்க்கெட் பகுதியில் மது விலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சட்டவிராதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட பாளையை சேர்ந்த ராமகிருஷ்ணன்(28) என்பவரிடமிருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, மது விலக்கு அமலாக்க பிரிவு குற்ற எண் 42/2026 ன் படி வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.
News March 12, 2026
நெல்லையில் வாலிபர் மர்ம மரணம்

மானூர் அருகே உக்கிரன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த லின்சன் மைக்கேல் தனது மனைவியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகிறார். மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியில் இருந்த மைக்கேல் வேலைக்கு செல்லாமல் உக்கிரன்கோட்டையில் உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். இந்நிலையில் அங்குள்ள கருமேனியன் குளத்தில் அவருடைய உடல் மிதந்துள்ளது. மானூர் போலீசார் உடலை கைப்பற்றி இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


