News August 27, 2025
மயிலாடுதுறை: பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறை ஊராட்சியில், தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க பொதுமக்களின் குறைகளை கேட்டு அறியும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது ஒன்றிய செயலாளர்கள் வைத்தியநாதன், ராஜா, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வெடி பாலமுருகன் உள்ளிட்டோர் உள்ளனர்.
Similar News
News August 27, 2025
சீர்காழி சட்டைநாதர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், அருள்பாலித்து வரக்கூடிய திருநிலை நாயகி உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. விநாயகப் பெருமான் உற்சவமூர்த்தி மண்டபத்தில் எழுந்தருளி அபிஷேகங்கள் செய்து ஆராதனைகள் நடைபெற்றது. மாலை 6 மணி அளவில் விநாயகர் உற்சவர் மூர்த்தி தேர் வீதிகளில் வலம் வந்து மக்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். அதற்காக மலர் மாலைகள் சாத்தப்பட்டுள்ளது.
News August 27, 2025
வாணகிரி பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா சீர்காழி அடுத்த வாணகிரி பகுதியில் இன்று 27/8/2025 புதன் கிழமை இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, வாணிகிரி மேலையூர் மறறும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பலரும் கொழுக்கட்டை, சுண்டல், பழங்கள் வைத்து படைத்து வருகிறார்கள்.
News August 27, 2025
மயிலாடுதுறை: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை!

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் இங்கே <