News August 27, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆக.26) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News September 22, 2025
தஞ்சை: நவராத்திரியில் செல்ல வேண்டிய கோவில்கள்!

கண்டியூர் கிழக்கே உள்ள திருவேதிக்குடியில் பிரசித்தி பெற்ற வேதபுரீசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் இங்கு அம்மன் வலது புறமும் சிவன் இடது புறமும் இணைந்துள்ள அர்த்தநாரீசுவரரைக் காணலாம். கூடுதலாக இங்குள்ள மூலவரை நவராத்திரி தினத்தன்று எலுமிச்சை மாலை அணிவித்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்றும், திருமண வரன், கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க!
News September 22, 2025
தஞ்சை: 810 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்

தஞ்சாவூர் விளார் சாலையில், தஞ்சாவூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினர் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது பயணிகள் ஏற்றிச் செல்லும் வேனில் 810 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து அரிசியை கடத்திய குமரன், நிஜாத்ஜாபர், பாலாஜி 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்த 810 கிலோ ரேஷன் பறிமுதல் செய்யப்பட்டன.
News September 22, 2025
தஞ்சை: வங்கியில் வேலை.. ரூ.80,000 சம்பளம்!

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம் வங்கிகளில் காலியாக உள்ள 13,217 Manager, Assistant Manager உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு ரூ.35,000 முதல் 80,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வரும் செப்.28-க்குள், https://www.ibps.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். SHARE NOW!