News April 9, 2024
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை

தமிழக அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 26ம் தேதி தொடங்கி நேற்றுடன் (08.04.2024) நிறைவு பெற்றது. ஆகையால், இன்று முதல் அவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. அடுத்த கட்டமாக 10ஆம் வகுப்பு மாணவர்கள் 11ம் வகுப்பு (அ) பல்தொழில்நுட்ப படிப்புகளுக்கு தயாராக உள்ளனர். மே.10ம் தேதி இத்தேர்வு முடிவுகள் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 12, 2025
ராணிப்பேட்டை: NABARD வங்கியில் வேலை வேண்டுமா..?

ராணிப்பேட்டை பட்டதாரிகளே.., தேசிய கிராமப்புறப் புற வங்கியான NABARD Grade – A வங்கித் தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Assistant Manager உட்பட பல்வேறு பதவிகளுக்கான தேர்வுகள் நடைபெறும். மாதம் ரூ.44,500 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் <
News November 12, 2025
சி.வி.சண்முகம் மீது பாயப்போகும் நடவடிக்கை

பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய சி.வி.சண்முகம் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு, மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. சமீபத்தில் விழுப்புரத்தில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், இலவசமாக ஆடு, மாடு, கொடுப்பது போல், ஆளுக்கு ஒரு பொண்டாட்டியையும் இலவசமாக கொடுப்பாங்க என்று அரசு வழங்கும் இலவசத்தோடு பெண்களையும் ஒப்பிட்டு அவர் சர்ச்சையாக பேசியதாக கூறப்படுகிறது.
News November 12, 2025
BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது

கடந்த 2 நாள்களாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று மீண்டும் குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹100 குறைந்து ₹11,600-க்கும், சவரனுக்கு ₹800 குறைந்து ₹92,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தை எதிரொலியால் இன்று விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தலைகீழாக மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதனால், நகை பிரியர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


