News August 26, 2025
புதிய மகளிர் உரிமைத் தொகை.. தேதி குறிச்ச அரசு!

மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்கள் எப்போது பணம் டெபாசிட்டாகும் என காத்திருக்கின்றனர். அவர்களுக்கு அண்ணா பிறந்தநாளையொட்டி செப்டம்பர் 15-ல் பணம் டெபாசிட் செய்யப்படவுள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சில நாள்களில் இந்த திட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்ட பயனர்களின் பட்டியல் வெளியாகவுள்ளது. தற்போது, 1.15 கோடி மகளிருக்கு ₹1,000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
Similar News
News August 26, 2025
AI-ஆல் சினிமாவிற்கு ஆபத்து: அனுராக் எச்சரிக்கை

AI-ஆல் உருவாகும் படங்கள் சினிமாவிற்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் எச்சரித்துள்ளார். AI திரைப்படங்கள் கலைஞர்களை புறக்கணித்து, அவர்களை வெறும் கூலிக்கு வேலை செய்யும் வேலைக்காரர்களாக மாற்றிவிடும் எனவும், இதனால் திறமையான கலைஞர்களை இழக்கும் சூழல் ஏற்படும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார். மேலும், AI படங்களை விட்டு நடிகர்கள் வெளியேறவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
News August 26, 2025
சற்றுமுன்: நகைக்கடன்.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

தங்கம் விலை அதிகரித்து வரும் நிலையில், நகர கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடனுக்கு முன்னுரிமை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விவசாயிகளின் உயிர் நாடியான பயிர் கடனை நகர கூட்டுறவு சங்கங்களில் நிறுத்தவும், வீட்டுக்கடன், நகைக்கடன், வணிகக் கடன்கள் வழங்க கவனம் செலுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயிர் கடனை நிறுத்தினால், விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
News August 26, 2025
டிரம்ப் மிரட்டல்.. இந்தியாவை விட்டுக் கொடுக்காத ஆப்பிள்

ஐபோன் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற ஆப்பிள் நிறுவனம் முயற்சித்து வருகிறது. இந்நிலையில் தான், இந்திய பொருள்களுக்கு அமெரிக்காவில் நாளை முதல் 50% வரி விதிக்கப்பட உள்ளது. ஆனால், டிரம்பின் மிரட்டலுக்கு அடிபணிய போவதில்லை என ஆப்பிள் நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது. இந்தியாவில் தங்களுடைய உற்பத்தியை விரிவாக்கம் செய்யும் எண்ணத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளது.