News August 26, 2025

திருச்சி: தாசில்தார் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது ?

image

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், திருச்சி மாவட்ட மக்கள் 0431-2420166 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

Similar News

News August 26, 2025

திருச்சி: தேர்வு இல்லாமல் ரயில்வேயில் வேலை

image

திருச்சி மக்களே.. இந்திய தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 3,518 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் திருச்சி, பொன்மலை டிவிசனில் 697 பணியிடங்களுக்கு தேர்வு இல்லாமல் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே க்ளிக் செய்து <<>>செப்.25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News August 26, 2025

திருச்சி: தொழிலக பாதுகாப்பு இணை இயக்குநர் அறிக்கை

image

திருச்சி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் விமலா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு அரசின் தொழிலக பாதுகாப்பு இணையதளம் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பதிவு பெற்ற தொழிற்சாலைகள் https://dish.in.gov.in என்ற இணையதளத்தில் தொழிற்சாலை விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News August 26, 2025

திருச்சி: பறவைகள் பூங்கா நாளை செயல்படும்

image

திருச்சி கம்பரசம்பேட்டை அருகே அமைந்துள்ள பறவைகள் பூங்காவில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மாதத்தின் கடைசி புதன்கிழமை மூடப்படுவது வழக்கம். இந்நிலையில் நாளைய தினம் புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி என்பதால், பொதுமக்கள் வருகையை கருத்தில் கொண்டு, நாளைய தினம் பறவைகள் பூங்கா செயல்படும் என பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!