News August 26, 2025

புதுவை: வேளாண் சுயதொழில் தொடங்க வாய்ப்பு

image

தட்டாஞ்சாவடியில் உள்ள வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை கூடுதல் இயக்குநர் அலுவலகம், வேலையில்லாத விவசாயப் பட்டதாரிகள் மற்றும் வேளாண் சான்றிதழ் பயிற்சி முடித்தவர்கள், வேளாண் சுயதொழில் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை நிலையம் தொடங்க விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பைப் பெற, உங்கள் பகுதிக்குரிய உழவர் உதவியக வேளாண் அலுவலரிடம் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News August 26, 2025

காரைக்கால் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு

image

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் காரைக்கால் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் மருத்துவமனை வெளிப்புற சிகிச்சை பிரிவை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் மாத மாத்திரை வாங்க வரிசையில் காத்திருந்த முதியோர்களிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்த ஆட்சியர் நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறைகளை தினந்தோறும் பராமரிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

News August 26, 2025

513 ஊழியர்களுக்கு நிலுவை ஊதியம் ரூ.13 கோடி

image

பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பொதுப்பணித்துறையில் பணிபுரிந்து வரும் 510 பல்நோக்கு ஊழியர்கள் (எம்டிஎஸ்), 3 பணி ஆய்வாளர்களுக்குப் பின் பணியில் சேர்ந்த ஊழியர்கள் அதிக ஊதியம் பெறுவதை மேற்கோள் காட்டி, ஊதிய உயர்வு நிலுவைத் தொகையினை வேண்டி கோரிக்கைகள் வைத்ததையடுத்து, ஊதிய உயர்வு நிலுவைத்தொகை ரூ.13 கோடி வழங்கப்பட உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

News August 26, 2025

புதுச்சேரி: டாக்டர் தற்கொலை!

image

புதுச்சேரி முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேஷ்பாபு (24), எம்.பி.பி.எஸ்., முடித்துவிட்டு, மேற்படிப்புக்காக நுழைவு தேர்வு எழுதி இருந்தார். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மதிப்பெண் குறைவாக எடுத்திருந்தார். இதனால் மனமுடைந்த வெங்கடேஷ்பாபு நேற்று காலை, அவரது அறையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து முதலியார் பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!