News August 26, 2025

மயிலாடுதுறை வரலாறை தெரிந்துகொள்ளுங்கள்!

image

மயிலாடுதுறை சோழர்கள் தொடங்கி மராட்டியர்கள், பிரிட்டிஷ் பேரரசு உள்ளிட்ட பல்வேறு வம்சங்களால் ஆளப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடையும் வரை முந்தைய தஞ்சை மாவட்டத்தின் பகுதியாகவும், 1991 வரை தஞ்சாவூர் மாவட்டமாகவும், 2020 வரை புதிதாக உருவாக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும் இருந்தது. இந்நிலையில் டிசம்பர் 28, 2020 அன்று தமிழ்நாட்டின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை தொடங்கியது. ஷேர் பண்ணுங்க

Similar News

News August 26, 2025

மயிலாடுதுறை: லஞ்சம் கேட்டால் இத பண்ணுங்க!

image

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், மயிலாடுதுறை மாவட்ட மக்கள் 04364-299952 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News August 26, 2025

மயிலாடுதுறை: அரசு பேருந்து குறித்து புகார் அளிக்க எண்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து, உங்களது புகார் அல்லது குறைகளை தெரிவிக்க ‘1800 599 1500’ என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதன் மூலம் பேருந்து கால தாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர் அல்லது நடத்துநர் பயணிகளிடம் தரக்குறைவாக நடந்து கொள்வது குறித்து உங்களால் வீட்டிலிருந்த படியே புகார் தெரிவிக்க முடியும். இந்த தகவலை SHARE செய்து அனைவருக்கும் தெரியப்படுத்துங்க

News August 26, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது. இதில் மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோயில், பொறையார், சீர்காழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரோந்து செல்லும் போலீசாரின் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் குற்ற நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.

error: Content is protected !!