News April 9, 2024

கடலூர் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு கடலூர் உதவி ஆய்வாளர் ரேவதி, சிதம்பரம் காவல் ஆய்வாளர் சுஜாதா, விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் கீதா, நெய்வேலி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் திட்டக்குடியில் உதவி ஆய்வாளர் சுபிக்க்ஷா ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 6, 2025

இடை நின்ற 1,671 மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு

image

கடலூர் மாவட்டத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்கிறது. 16 வட்டாரங்களிலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10ம் வகுப்பில் 1671 மாணவர்கள் இடை நின்றது கண்டறியப்பட்டது. அவர்களின் வீடுகளுக்கு சென்று கல்வியின் முக்கியத்துவத்தை கூறி மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டதாக மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News November 6, 2025

கடலூர்: பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

image

வேப்பூர் அடுத்த பூலாம்பாடியை சேர்ந்தவர் பரமசிவம் மகன் ராஜதுரை (33). இவர் நேற்று முன்தினம் வேப்பூர் விருத்தாசலம் சாலையில் பைக்கில் சென்றார். அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். பின்னர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜதுரை நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

News November 6, 2025

கடலூர்: பெண் குழந்தை உள்ளதா? இத செய்ங்க!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கடலூர் மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம். SHARE IT NOW…

error: Content is protected !!