News August 26, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 439 ▶குறள்:
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.
▶ பொருள்: எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈடுபடக் கூடாது.
Similar News
News August 26, 2025
இன்றே இப்போதே கேட்டுவிடுங்கள்..

‘நாங்கல்லாம் அந்த காலத்துல’ எனச் சொல்லும் தலைமுறையிலும் சரி, இன்றைய நவீன வாழ்விலும் சரி, நாம் பரபரப்பாகவே இயங்கி வருகிறோம். இதனிடையே, நமக்கு பிடித்தவர்களிடம் கூட சில விஷயங்களை பேசவோ, கேட்கவோ மறந்திருப்போம் (அ) வேண்டுமென்றே தவிர்த்திருப்போம். இதற்கான விடைகளை தெரிந்துகொண்டால் சந்தேகம், பயம், வெறுப்பு போன்றவை அடுத்த நொடியே நீங்கும். இவ்வாறான கேள்விகள் உங்களுக்கு உள்ளதா, யாரிடம் கேட்கப் போகிறீர்கள்?
News August 26, 2025
சிரஞ்சீவி நிலைதான் விஜய்க்கும்: வேலுமணி அட்டாக்

தவெக மாநாட்டில் ஸ்டாலின், EPS என யாரையும் விட்டு வைக்காமல், விஜய் அட்டாக் செய்ததுதான் தற்போது பேசுபொருளாக உள்ளது. இந்நிலையில், இபிஎஸ் பற்றி பேச தவெக தலைவர் விஜய்க்கு உரிமையில்லை என்று முன்னாள் அமைச்சர் வேலுமணி பதிலடி கொடுத்துள்ளார். ஆந்திராவில் மிகப்பெரிய கூட்டத்தை கூட்டி கட்சி தொடங்கிய சிரஞ்சீவியே கட்சியை கலைத்துவிட்டு போய்விட்டார்; அதே நிலைதான் விஜய்க்கும் வரும் என்று சாடியுள்ளார்.
News August 26, 2025
விஜய்க்கு எதிராக போட்டியிடும் பிரபல நடிகர் இவரா?

வரும் தேர்தலில் ஆட்சியை தக்கவைக்க பல ஸ்கெட்ச்களை போட்டு வருகிறது திமுக. இதில் ஒரு ஸ்கெட்ச்சாக, விஜய் போட்டியிடும் தொகுதியில் விஷாலை களமிறக்க உதய் தரப்பு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்பட்டது. உதய்யின் நெருங்கிய நண்பர் என்பதால் விஷாலும் இதனை ஏற்பார் என பேசப்பட்ட நிலையில், ’நான் ஏற்கெனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்’ என சமீபத்தில் பேட்டியளித்திருக்கிறார் விஷால். ஒருவேளை இருக்குமோ?